தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரம்பலூர் காந்தி சிலை அருகே கடை வைக்க அனுமதி கேட்டு சிஐடியு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,நவ.19:பெரம்பலூர் நகராட்சி, பழைய பஸ்டாண்டு காந்தி சிலை அருகே, பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட பகுதியில், சாலையோரக் கடைகள் வைத்துநடத்த அனுமதி கேட்டு சிஐடியு தொழிற்சங்கத்தினர் மற்றும் விற்பனை குழு உறுப்பினர்கள், பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினியை நேரில் சந்தித்து அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :

Advertisement

பெரம்பலூர் பழைய பஸ்டாண்டு காந்தி சிலை அருகே சாலையோர கடைகள் வைக்க, நகராட்சி நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இதனை கண்டித்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்தின் கெடுபுடியால் கடைநடத்த முடியாமல், 40 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் நாங்கள் மாற்றிடம் கிடைக்காமல் அவதிப்படுகிறோம்.

தலைமைத் தபால்நிலைய பகுதியில் செயல்படும் சாலையோர வியாபாரிகளுக்கு பழைய பஸ்டாண்டு உட்புறம் உள்ள காலி இடத்தை ஒதுக்க வேண்டும் என்று கேட்டாலும் நகராட்சி நிர்வாகம் தர மறுக்கிறது. எனவே, மாவட்டக் கலெக்டர் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு கடைவைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement