கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் சோமவார சிறப்பு வழிபாடு
Advertisement
ஜெயங்கொண்டம், நவ.18: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் முதல் சோமவாரம், பிரதோஷத்தையொட்டி நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதில், விசேஷமாக கோவில் வளாகத்தில் பக்தர்கள் குழுவினர் சார்பில் சிறுதானியங்களை கொண்டு சிவலிங்க வடிவத்தில் அமைத்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
Advertisement