தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அனுக்கூர் பெரிய ஏரியில் பனை விதை நடும் விழா

பெரம்பலூர்,அக்.17: அனுக்கூர் பெரிய ஏரியில், பெரம்பலூர் வனக் கோட்டம் சார்பாக மாபெரும் பனை விதை நடும் விழா நடை பெற்றது. மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் பங்கேற்பு. தமிழ்நாடு முழுவதும் 6கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி திட்டத்தித்தின் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அனுக்கூர் கிராமத்திலுள்ள பெரிய ஏரியில், பெரம்பலூர் வனக் கோட்டம், வனவியல் விரிவாக்க மையம், சித்தளி மற்றும் பசுமை பயணம் தன்னார்வலர்கள் இணைந்து மாபெரும் பனை விதை நடும் விழா பனை விதைக்க படை திரட்டுவோம் என்கிற பெயரில் நடத்தப்பட்டது.

Advertisement

6000 விதைகள் சேகரிக்கப் பட்டு மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில், பெரம்பலூர் மாசு கட்டுப்பாடு துறை, வட்டார வளர்ச்சித் அலுவலர், தாசில்தார், பள்ளிக் கல்வித்துறை, வனச்சரகர்கள், களப்பணியாளர்கள், ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பனைவிதை நடவு செய்தனர். மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் பனை மரத்தின் முக்கியத்துவம் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்,

வனவியல் விரிவாக்க மைய விளம்பர அலுவலர் சங்கரேஸ்வரி ஏற்பாடுகளை செய்திருந்தார். பசுமை பயணம் தொண்டு அறக் கட்டளை நிறுவனர் இளைய ராஜா, பெரம்பலூர் வன சரக அலுவலர், சமூக காடுகள் வனச் சரகர், TAP II வனச் சரகர் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று விதைகளை நடவு செய்தனர்.

 

Advertisement

Related News