தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பெரம்பலூர் அருகே காட்டுப்பூனையை வேட்டையாடியவர் கைது

பாடாலூர், ஆக.15: பெரம்பலூர் அருகே காட்டுப்பூனையை வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் உத்தரவின் படி, பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிகுமரன் தலைமையில், வனவர் அருணாஸ்ரீ, வனக்காப்பாளர்கள் மணிகண்டன், அறிவுச்செல்வன், வனக்காவலர் மோகன்ராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்றுமுன்தினம் சிறுவாச்சூர் வனப்பகுதிக்கு உட்பட்ட சிறுகன்பூர்-கொளக்காநத்தம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை வனத்துறையினர் மடக்கி நிறுத்தி ஆய்வு செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் இருந்த பையில் காப்புகாட்டில் வேட்டையாடிய காட்டுப் பூனை இறந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வனத்துறையினர் அவரை கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தியதில், ஆலத்தூர் தாலுகா கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் வசந்த் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து காட்டுப் பூனை மற்றும் வேட்டையாட பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, வசந்தை வனத்துறையினர் கைது செய்து பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Related News