தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி கலெக்டர் தொடங்கிவைத்தார்

பெரம்பலூர், அக். 12: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மிதிவண்டிப்போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகில் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் 13 வயது வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 15 கி.மீ தூரமும், பெண்களுக்கு 10 கி.மீ தூரமும், 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 20 கி.மீ தூரமும், பெண்களுக்கு 15 கி.மீ தூரமும் 17 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 20 கி.மீ தூரமும், பெண்களுக்கு 15 கி.மீ தூரமும் நடத்தப்பட்ட இப்போட்டியானது, மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தொடங்கி பாலக்கரை வழியாக மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. மிதி வண்டி போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000 ம் இரண்டாம் பரிசாக ரூ.3,000 ம், மூன்றாம் பரிசாக ரூ.2,000/- ம், நான்காம் இடம் முதல் பத்தாம் இடம் பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வீதமும் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கான ஆணைகளையும், பாராட்டுச்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அட்மா தலைவர் ஜெகதீசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பொற்கொடி, உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement