தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரம்பலூரில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட உ.பி. வாலிபர் சிகிச்சைக்கு பின் உறவினரிடம் ஒப்படைப்பு

பெரம்பலூர், செப்.12: மனநலம் பாதிக்கப்பட்டு, பெரம்பலூர் பகுதியில் சுற்றித் திரிந்த உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நபரை மீட்டு மனநல சிகிச்சைக்குப் பின் உறவினருடன் அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு எஸ்பி ஆதர்ஷ் பசேரா பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement

பெரம்பலூர், நான்குரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த சுரேந்தர் (30) என்ற நபரை பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ மருதமுத்து, கடந்த ஏப்ரல் 28ம் தேதி பெரம்பலூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தீரன் நகர் பகுதியில் இயங்கி வரும் வேலா கருணை இல்லத்திற்கு அழைத்துச்சென்று அதன் நிர்வாகி அனிதா என்பவரிடம் ஒப்படைத்தார்.

பின்னர் சுரேந்தருக்கு அரசு மனநல மருத்துவர் அசோக் என்பவர் மூலம், வேலா கருணை இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குணமடைந்த நிலையில் அவர் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சுரேந்தர் (30) என்பது தெரிய வர அவரது அண்ணனான உத்திரபிரதேசம் மாநிலம், ஜெர்மா, மகாராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த நரேஷ் மகன் அரவிந்த், (33) என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று சுரேந்தரை, அவரது அண்ணன் அரவிந்திடம் பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் மார்கிரேட் மேரி, எஸ்எஸ்ஐ மருதமுத்து, வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா மற்றும் மனநல மருத்துவர் அசோக் ஆகியோர்களால் நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டார். இத்தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா மனநலம் பாதித்து பெரம்பலூரில் சுற்றித்திரிந்த சுரேந்தரை மீட்டு சிகிச்சை அளித்து பாதுகாப்பான முறையில் உறவினரிடம் ஒப்படைக்க உதவிய அனைவரையும் பாராட்டினார்.

 

Advertisement