தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில் அறங்காவலர் குழு நியமன தலைவர், உறுப்பினர்கள் பதவியேற்பு

பெரம்பலூர், செப். 11: பெரம்பலூர் நகரில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோயிலில் நேற்று பெரம்பலூர் மாவட்ட அறங்காவலர் குழு நியமனத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக நடைபெற்றது.

Advertisement

இந்த விழாவில் இந்து சமய அறநிலையத் துறையின் திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி கலந்து கொண்டு, பெரம்பலூர் மாவட்ட அறங்காவலர் குழு நியமனத் தலைவராக பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவருக்கும், உறுப்பினர்களாக தழுதாழை டி.சி.பாஸ்கர், சண்முகம், ராமச்சந்திரன், கோகிலா. ஆகியோருக்கும் பதவி பிரமாணங்களை செய்து வைத்தார்.

இந்த பதவியேற்புவிழாவில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், பெரம்பலூர் அட்மா தலைவர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டு புதிதாக பதவி ஏற்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினர்.

நிகழ்ச்சியில் , இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் உமா, செயல் அலுவலர்கள் அசனாம்பிகை, ரவிச்சந்திரன், ஹேமாவதி, ஸ்ரீதேவி உட்பட திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பெரம்பலூர் ராஜா ஸ்டோர்ஸ் மகேஸ்வரன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் திருக் கோயில்களின் பிரசாதங்களை பெற்று கொண்டனர்.

 

Advertisement