தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு பாடாலூரில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி

 

Advertisement

பாடாலூர், அக். 10: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் வட்டார வள மையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் வட்டார வள மையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நடந்தது. இதற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) வஹிதா பானு தலைமை தாங்கி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுநர் தலைமலை அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர்கள் மோகன், அன்பரசு, தலைமலை, வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

இதில் மாணவர்களுக்கு புரியும் வகையில் தொடக்கநிலை அடிப்படை திறன் ஆய்வு செய்தல், அடிப்படைத் திறனறிதல், கற்றல் விளைவு, அடைவு நிலை அட்டவணை, அடிப்படை எண்கள் அறிதல், அடிப்படை எழுத்தறிதல் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியன சார்ந்தும் இல்லம் தேடி கல்வி மைய அடிப்படை செயல்பாடுகள் பற்றி மாணவர்களுக்கு எவ்வாறு எளிய முறையில் கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது பற்றி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் 65-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இறுதியல் ஆசிரியர் பயிற்றுநர் பரிமளா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Advertisement

Related News