தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆண்டிமடம் அருகே முன்விரோதம் கணவன், மனைவியை கட்டையால் தாக்கியவருக்கு 4½ ஆண்டுகள் சிறை

 

Advertisement

ஜெயங்கொண்டம், அக்.7: ஆண்டிமடம் அருகே பொதுப்பாதை பிரச்னையில் முன்விரோதம் காரணமாக கணவன், மனைவியை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவருக்கு நாலரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஜெயங்கொண்டம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காங்குழி கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமன் (50), அதே ஊரைச் சேர்ந்த ரவி (44). இவர்கள் இருவரும் உறவினர்கள். இவர்களுக்கிடையே பொதுப்பாதை தகராறு, காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் ரவி பொதுபாதையில் வேலி அமைக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதனை தட்டிக்கேட்ட கோதண்டராமனையும் அவரது மனைவியையும், ரவி மரக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கோதண்டராமன் அளித்த புகாரின் அடிப்படையில் 2018 டிசம்பர் 24 ம் தேதி ஆண்டிமடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணை ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று (அக்.6ம் தேதி) நடைபெற்றது. விசாரணை முடிவில் குற்றவாளி ரவிக்கு நான்காண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் மற்றும் ரூ பத்தாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

Advertisement