தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாரதிய இளங்கவிஞர் விருது மாநில போட்டிக்கு அரசு கல்லூரி மாணவர் தேர்வு

பெரம்பலூர், ஆக. 7: வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் 2025 - 2026ம் ஆண்டின், பாரதி இளைஞர் விருதிற்கான மாவட்ட அளவிலான கவிதைப் போட்டி நடைபெற்றது. இதில் தேர்வான இருவர் மாநில அளவிலான கவிதைப் போட்டிக்குத் தேர்வு பெற்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025 - 2026ம் ஆண்டின், பாரதி இளைஞர் விருதிற்கான பெரம்பலூர் மாவட்ட அளவிலான கவிதைப் போட்டி கல்லூரிக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில், பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு மாணவர் இளவரசன், பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலைஅறிவியல் கல்லூரியின் பி.சி.ஏ இரண்டாமாண்டு மாணவி கற்பக ரட்சாம்பிகை ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

அவர்களைக் கல்லூரி முதல்வர் சேகர், கணினி அறிவியல் துறைத் தலைவர் சகாயராஜ், நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முத்துராஜ் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். அவர்கள் இருவரும் சென்னையில் மாநில அளவில் நடைபெற உள்ள பாரதிய இளங் கவிஞர் விருதுக்கான கவிதை போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். மாநில அளவில் வெற்றி பெற்றால் விருதுடன் தலா ரூ.1 லட்சம் ரொக்கம் பரிசு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related News