தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரம்பலூர் உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி

பெரம்பலூர், அக்.4: பெரம்பலூர் மாவட்ட பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் 2நாள் மாநில அளவிலான மேசைப் பந்தாட்ட தேர்வுப் போட்டிகள் நேற்று தொடங்கியது. 240 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பாக, பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் ஆலோசனையின் பேரில் மாநில அளவிலான மேசைப் பந்தாட்ட (டேபிள் டென்னிஸ்) தேர்வுப் போட்டிகள் நேற்று (3ம் தேதி) துவங்கி இன்று (4ம் தேதி) வரை 2 நாட்கள் நடைபெற்று வருகிறது.

Advertisement

இப்போட்டிகள் மாணவர்களுக்கு, மாணவிகளுக்கு தனித் தனியாக பெரம்பலூர் மாவட்ட, பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. போட்டிகளில் கடலூர், கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருவள்ளூர், வேலூர் , கன்னியாகுமரி, தேனி, சேலம் ஆகிய 8 மண்டலகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வயது மற்றும் பிரிவு வாரியாக 14 வயதிற்குட்பட்ட ,17 வயதிற்குட்பட்ட, 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் தேர்ந்தெடுக்கப்படும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்து கொள்ள உள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் வயது மற்றும் பிரிவு வாரியாக தலா 5 மாணவ, மாணவிகள் என 30 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நேற்று நடைபெற்ற தெரிவு போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 120 மாணவர்களும், பெண்கள் பிரிவில் 120 மாணவிகளும் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News