தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநில ஹஜ் ஆய்வாளர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர்,நவ.1: பெரம்பலூர் மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற, மாநில ஹஜ் ஆய்வாளர்கள் தற்காலிகமாக சவுதி அரேபியாவில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி தகவல். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது தனது சுற்றறிக்கையில், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக நியமிக்க சவுதி அரேபியா அனுப்ப, நிகர் நிலை மூலம் (Online) விண்ணப்பங்களை வரவேற்கிறது . தற்காலிக பணிக்காலம் வருகிற 2026 ஏப்ரல் 13ஆம் தேதி முதல் 2026 ஜூலை 05ஆம்தேதி வரை சுமார் இரண்டு மாத காலமாகும்.

முஸ்லிம் மதத்தினைச் சேர்ந்த மத்திய /மாநில அரசு ஊழியர்கள், துணை ராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அல்லது மத்திய மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள், விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள் ஆவர்.

மாநில ஹஜ் ஆய்வாளர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக் காலமாக கருதப்படும். www.hajcommittee.gov.in என்ற மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கு வருகிற 03ஆம்தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். எனவே, இந்த வாய்ப்பை தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்டக் கலெக்டர் மிருணாளினி வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Advertisement