தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கங்கைகொண்டசோழபுரத்தில்பொதுப்பாதையில் ரேஷன்கடை

ஜெயங்கொண்டம், செப்.30: கங்கைகொண்டசோழபுரத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து ரேஷன் கடை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம இளைஞர்கள் கட்டிடப்பணியை முற்றுகையிட்டனர். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் புதிய ரேஷன்கடை கட்டும் பணியை சில தினங்களுக்கு முன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இந்நிலையில் பொதுப்பாதையை ஆக்கிரமித்து ரேஷன் கடை கட்டப்படுவதாகவும், இதனால் பொதுப்பாதை குறுகி அங்கே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் அன்னாபிஷேக மண்டபத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்படும், மேலும் பொதுமக்கள் பாதசாரிகள், வாகனங்கள் செல்ல முடியாத நெருக்கடி ஏற்படும் எனக் கூறி அக்கிராம இளைஞர்கள் கட்டிட பணிகள் நடைபெறும் இடத்திற்கு முன்பாக முற்றுகையிட்டு கோஷமிட்டனர். அரசே சட்ட விரோதமாக பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்றும், எனவே உடனடியாக பணிகளை நிறுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே இருந்த பழைய இடத்திலேயே ரேஷன் கடை கட்ட வேண்டும் என்றும், இளைஞர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

Related News