அரியலூர் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 268 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
அரியலூர்,அக்.28: அரியலூர் கலெக்டர் அலுவலத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 268 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் ரத்தினசாமி உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 268 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் மூலம் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்து துறைஅரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.