தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊரக வேலை வாய்ப்பு மையத்தில் பெண்களுக்கான ஆரி எம்பிராய்டரி இலவச பயிற்சி: தொழில் தொடங்க கடன் வழங்கல்

பெரம்பலூர், நவ.27: ஊரக வேலை வாய்ப்பு மையத்தில் பெண்களுக்கான ஆரி எம்பிராய்டரி இலவச பயிற்சி தொழில் தொடங்க வங்கிக் கடன் அளிக்கப்படுவதாக மைய இயக்குனர் அறிவித்துள்ளார். ஐஓபி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் முருகையன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :பெரம்பலூர் நகரில், எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சிமையத்தின் மூலம், பெண்களுக்கான ஆரி எம்பிராய்டரி பயிற்சி வருகிற டிச.10ம் தேதி முதல் இலவசமாக வழங்கப்பட உள்ளது. 30 நாட்கள் நடைபெற உள்ள இந்தப் பயிற்சி, தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5:30 மணிவரை நடைபெறும். பயிற்சி காலத்தில் மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீர் விலை இல்லாமல் வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி பெற்றவுடன் வங்கிக் கடன் பெற்று, உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

Advertisement

இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர், 19வயது முதல் 50 வயதுக்குட்பட்டவராகவும், எழுதப் படிக்கத் தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் வறுமைக்கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது (AAY) குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரிவேலை அட்டை உள்ள கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என பெரம்பலூர் ஐஓபி வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்புப் பயிற்சி மையத்தின் இயக்குனர் முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News