தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் புதிய உணர்வு-மாற்றத்திற்கான முன்முயற்சி 4.0 பேரணி

பெரம்பலூர், நவ. 26: பெரம்பலூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தையொட்டி \புதிய உணர்வு - மாற்றத்திற்கான முன்முயற்சி 4.0 என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தில், \”புதிய உணர்வு - மாற்றத்திற்கான முன்முயற்சி 4.0 என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நேற்று பெரம்பலூரில் நடைபெற்றது.

Advertisement

மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்ட இந்தப் பேரணியை பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில், குழந்தை திருமணத்தை ஒழிப்போம், குடும்ப வன்முறையைத் தடுப்போம், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம், பெண் கல்வியை ஊக்குவிப்போம், பாலின வன்முறைக்கு எதிராக குரலெழுப்புவோம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் பெண்களுக்கு எதிரான பாலின சமத்துவ உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்தப் பேரணியில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் கோபால கிருஷ்ணன், மகளிர் திட்ட உதவி அலுவலர் பெர்லினா, வட்டார இயக்க மேலாளர்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement