தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பனங்காடு பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் மக்கள் அவதி

தஞ்சாவூர், ஜூன் 25:தஞ்சை பனங்காடு பகுதியில் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தஞ்சை பூக்காரத்தெரு அருகே பனங்காடு பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தஞ்சை பூக்காரத்தெருவில் இருந்து புதுஆற்றின் கரையோரத்தில் உள்ள சாலை வழியாக அப்பகுதியை சேர்ந்தவர்கள், மாணவ, மாணவிகள் நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பனங்காடு பகுதிக்கு செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக நீண்ட தூரத்துக்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

Advertisement

சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குவிந்து கிடக்கும் குப்பைகளால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடியபடி செல்ல வேண்டிய நிலை உருவாகி உள்ளது. ஒரு சிலர் இறைச்சி கழிவுகளையும் முட்டைகளாக கட்டி சாலையோரத்தில் போட்டுச் செல்கின்றனர்.

இந்த குப்பைகளை நாய்கள் இழுத்து சாலை நடுவே போட்டுச்செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News