தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆடி மாதம் தொடக்கம் ஜவுளி வாங்க குவிந்த மக்கள்: வியாபாரிகள் மகிழ்ச்சி

 

Advertisement

ஈரோடு, ஜூலை 17: ஈரோடு ஜவுளி சந்தையில் ஆடி மாத பிறப்பையொட்டி ஜவுளி ரகங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஈரோடு ஜவுளி சந்தையானது பன்னீர்செல்வம் பார்க், ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் போன்ற பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய் கிழமை வரை நடைபெறும். இந்த சந்தையில் துணிகளை கொள்முதல் செய்வதற்காக மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்வர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக பண்டிகை சீசன் இல்லாததால் வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த மொத்த வியாபாரிகள் வராததால், மொத்த விற்பனை சரிவடைந்தது. கடந்த வாரம் முதல் ஜவுளி சந்தை வியாபாரிகள் ஆடி மாத விற்பனைக்காக ஜவுளி ரகங்களை விற்பனைக்கு குவித்து வைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வாரம் கூடிய சந்தையில் ஆடி மாத பிறப்பையொட்டி ஜவுளி விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

வெளிமாநில வியாபாரிகள் குறைந்தளவு வந்திருந்ததாலும், வெளிமாவட்ட வியாபாரிகள் மற்றும் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் ஜவுளி சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான வேட்டி, சர்ட், துண்டு, லுங்கி, சுடிதார் ரகங்கள், சிறுவர், சிறுமிகளுக்கான ஆடைகள், உள்ளாடைகளை தேர்வு செய்து மொத்த விலையில் வாங்கி சென்றனர். இதனால், இந்த வாரம் சில்லரை விற்பனை அதிகரித்து காணப்பட்டதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News