தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்- சங்கர் காலனி இணைப்பு சாலை அமைக்க மக்கள் கோரிக்கை

 

தூத்துக்குடி, ஜூலை 14:தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் முன்பிருந்து சங்கர் காலனி வரையிலான இணைப்புச்சாலையை நிறைவேற்றித்தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி 3வது மைல் முதல் ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் வரையிலான தமிழ்வழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பல்வேறு இடங்களில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, அதற்கு மாற்றாக கணேஷ்நகர் சந்திப்பில் இருந்து பாலிடெக்னிக் கல்லூரி, காமராஜ்நகர் வழியாக சங்கர் காலனிவரை புதிய சாலை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. இதனையடுத்து ஆய்வு செய்த அதிகாரிகள் தற்போது கணேஷ்நகர் சந்திப்பில் இருந்து அரசு பாலிடெக்னிக் முன்பு வரை சாலை அமைத்துள்ளனர்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்பிருந்து சங்கர் காலனி வரையிலான சாலை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடம் அமைந்தால் போக்குவரத்திற்கு வசதியாக இருக்கும் என்று காமராஜ்நகர், சங்கர்காலனி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.