தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி மாவட்ட கோர்ட்டுகளில் மக்கள் நீதிமன்றம் 1,514 வழக்குகளில் ₹15.31 கோடி மதிப்பீட்டில் தீர்வு: சமரச அடிப்படையில் நீதிபதிகள் நடவடிக்கை

திருச்சி, ஜூன் 9: திருச்சி மாவட்ட கோர்ட்டுகளில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1514 வழக்குகளில் தீர்வுத் தொகையாக ₹153154926 பெற்றுத்தரப்பட்டது. புதுடெல்லி தேசிய சட்டபணிகள் ஆணைக்குழு (NALSAY) மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு (TNSLSA) -ன் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி திருச்சி மாவட்டத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. தேசிய மக்கள் நீதிமன்றத்தை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமாகிய மணிமொழி துவக்கி வைத்தார். இதில் திருச்சி மாவட்ட கோர்ட் வளாகத்தில் 11 மக்கள் நீதிமன்ற அமர்வுகளும், மணப்பாறை. துறையூர் முசிறி, லால்குடி ஆகிய தாலுக்கா பகுதிகளில் உள்ள கோட்டுகளில் தலா 2 அமர்வுகளும், ரங்கம் மற்றும் தொட்டியம் கோர்ட்டில் தலா ஒரு மக்கள் நீதிமன்ற அமர்வுகளும் என மொத்தம் 21 அமர்வுகளில் பல்வேறு வகையான வழக்குகள் விசாரிக்கப்பட்டு சமரசமாக தீர்வு பெறப்பட்டது.

Advertisement

ஒவ்வொரு மக்கள் நீதிமன்ற அமர்விலும் ஒரு பணியில் உள்ள நீதிபதி தலைவராக செயல்பட்டு வழக்குகளில் சமரச முறையில் தீர்வு பெறப்பட்டது. இதில கோர்ட்டில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சமரசம் செய்யக் கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மோட்டார் வாகன இழப்பீடு கோரும் வழக்குகள், தொழிலாளர் நிவாரண வழக்குகள், குடும்பநல வழக்குகள், நில ஆர்ஜிதம் தொடர்பான வழக்குகள், தொழிலாளர் இழப்பீட்டு வழக்குகள் , உரிமையியல் சம்மந்தமான வழக்குகள் (Civil Cases), வங்கி வார கடன் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 10 615 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 1514 வழக்குகளில் தீர்வு பெறப்பட்டது. இதில் ₹153154926 தீர்வாக பெற்றுத்தரப்பட்டது.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதிகள், சப்-கோர்ட் நீதிபதிகள், உரிமையியல் கோர்ட் நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட் கோரி ட் நீதிபதிகள், வக்கீல்கள், அனைத்து சங்க நிர்வாகிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் , வங்கி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் (பொ) மீனாசந்திரா செய்திருந்தார்.

Advertisement

Related News