தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரியலூர் அண்ணாசிலை அருகே பென்சனர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

Advertisement

அரியலூர், செப். 14: அரியலூர் அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பென்சனர் நலச் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செப்.19 ம் தேதி நடைபெறும் மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தை முன்னிட்டு, நடைபெற்ற மக்கள் விளக்க சந்திப்பு ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்துத் துறையில் ஓய்வுபெற்றவர்களுக்கு பண பலன்கள் வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும்.

பிடிமானம் செய்த பணத்தை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அட்டை வழங்க வேண்டும். பணியின் போது உயிரிழக்கும் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் அரியலூர் கிளைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செயலர் சாமிதுரை முன்னிலை வகித்தார். மாநில பேரவைத் தலைவர் மருதமுத்து, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

Advertisement

Related News