தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாதா அம்ருதானந்தமயி தேவிக்கு அமைதிக்கான விருது வழங்கல்

 

கோவை, ஜூலை 8: உலகளாவிய அளவில்  மாதா அம்ருதானந்தமயி செய்து வரும் சமூக நலத்திட்டங்களை அங்கீகரித்து அவருக்கு அமைதிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

அம்ருபுரியில் உள்ள மாதா அம்ருதானந்தமயி மடத்தில் நடந்த விழாவில், விவேகானந்தா சர்வதேச உறவுகள் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ககன் மல்ஹோத்ரா மற்றும் தலைமை ஆதரவாளர் ரவிகுமார் ஐயர் ஆகியோர் அம்மாவுக்கு அமைதிக்கான விருதை அளித்தனர். விழாவில், பேசிய விவேகானந்தா சர்வதேச உறவுகளின் தலைமை ஆதரவாளர் ரவிகுமார் ஐயர், ”அம்மா உலகில் எங்கு சென்றாலும் அங்கு அமைதி நிலவுகிறது என்பது ஒரு உண்மை. தர்மத்தையும், சத்தியத்தையும் அடிப்படையாக கொண்ட இந்தியாவின் உன்னத தத்துவங்களை உலகிற்கு அம்மா பரப்ப முடியும்” என்றார்.

விழாவில்,  மாதா அம்ருதானந்தமயி தேவி பேசுகையில், ”இந்தியாவின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கொண்டுள்ள சனாதன தர்மத்தை கற்றுக்கொள்ளவும், பிறருக்கு கற்பிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும். சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையின் செய்தியும் இதுவே. இயற்கையை அனைவருக்கும் பொதுவானது என்று கருதினால் உலகில் அமைத்தி நிலவும்” என்றார். இதில், விவேகானந்தா சர்வதேச உறவுகளின் ஒருங்கிணைப்பாளர் ககன் மல்ஹோத்ரா, தர்பான் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி சாரிகா பன்ஹால்கர், ஸ்வநாத் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரேயா பாரதியா, சக்ரா அறக்கட்டளையின் தலைவர் ஏ.ராஜசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related News