தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

புழல் சிறைச்சாலை எதிரே நிழற்குடை இல்லாததால் பயணிகள் கடும் அவதி

 

புழல்: சென்னை புழல் மத்திய சிறைச்சாலை எதிரே சென்னை நோக்கி செல்லும் திசையில் உள்ள மாநகர பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை, மின்விளக்கு, பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் ஆகியவை இல்லாததால் புழல் பகுதியில் இருந்து சென்னை மூலக்கடை, பெரம்பூர், சர்மா நகர், வியாசர்பாடி, வள்ளலார் நகர், பாரிமுனை, தாம்பரம், கிண்டி, கோயம்பேடு, அண்ணா நகர், அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் பேருந்துக்காக கால் கடக்க நீண்ட நேரம் காத்திருந்து பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக இங்கு உள்ள மரத்தடி கீழே நின்று காத்திருந்து பயணிக்கின்ற அவல நிலை உள்ளது. மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் வழிப்பறியும், பாலியல் தொல்லைகளும் சில நேரம் நடக்கிறது. மழைக்காலங்களில் சிரமப்பட்டு பேருந்தில் பயணிக்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாதவரம் மாநகர போக்குவரத்து கழகத்தினரும், சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து பேருந்து நிழற்குடை அமைத்து மின்விளக்கு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்து பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.