தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிழற்குடை இல்லாததால் பயணிகள் பாதிப்பு

 

Advertisement

ஊட்டி, ஜூலை 6: ஊட்டியில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்வதற்காக, மத்திய பஸ் நிலையத்தின் அருகே ஒரு திறந்தவெளி பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கேர்ன்ஹில், இத்தலார், நஞ்சநாடு ஆகிய கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள், மினி பஸ்கள் அனைத்தும் இங்கு நிறுத்தப்படுகின்றன. இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமருவதற்கு இருக்கையோ அல்லது நிழற்குடைகளோ இல்லாமல் இருந்தது. இந்நிலையில், அப்பகுதியில் ஒரு சிறிய நிழற்குடை அமைக்கப்பட்டது.

இதனால், மழைக்காலங்களில் கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். அதே சமயம் பள்ளி நேரங்கள் மற்றும் மாலை நேரங்களில் இந்த நிழற்குடை போதுமானதாக இல்லை. மேலும், இந்த பஸ் நிறுத்தம் திறந்த வெளியில் உள்ளதால், நிழற்குடையில் நிற்பவர்கள் பஸ்சில் ஏறுவதற்குள் மழையில் சிக்கிக் கொள்கின்றனர்.

எனவே, இங்கு நிறுத்தப்படும் பஸ்களை எதிர் புறம் பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் பஸ்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அங்கு மேற்கூரை அமைத்து பயணிகள் பாதுகாப்பாக பஸ்களில் ஏறிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது போக்குவரத்து கழகத்தின் மூலமாகவோ கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் இந்த பஸ் நிறுத்தத்தில், பஸ்கள் நிற்கும் இடத்தில் கூரைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Related News