தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்செந்தூர் அரசு பள்ளி வளாகத்தில் கழிவுநீர் பாதை அமைக்க பெற்றோர் கடும் எதிர்ப்பு

திருச்செந்தூர், ஜூலை 1: திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கழிவுநீர் குழாய் பதிப்பதற்கு பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பகத்சிங் பேருந்து நிலையம் அருகில் செயல்படுகிறது. இங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பகத்சிங் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கட்டண கழிப்பிடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை பாதாள சாக்கடை திட்ட தொட்டியில் விடுவதற்காக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குழாய் பதிக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளி விடுமுறையில் நடந்துள்ளது.

Advertisement

இதையறிந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளி திறந்தவுடன் ஒப்பந்தக்காரர்கள் கழிவுநீர் செல்வதற்கான குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் ஆனந்த ராமச்சந்திரன், முன்னாள் தலைவர் மணல்மேடு சுரேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிச்சம்மாள், நிர்வாகிகள் ராஜ், தமிழ்ச்செல்வன், சங்கர், முன்னாள் மாணவர் ராஜேஷ், தமிழக மாணவர் இயக்க நிர்வாகி அஜித் ஆகியோர் கழிவுநீர் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஒப்பந்தக்காரர்கள் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றனர். இருந்த போதிலும் பள்ளி வளாகத்திற்குள் கழிவு நீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது.

Advertisement

Related News