தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தலைமை ஆசிரியர் அறையை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் செங்கம் அருகே பரபரப்பு கொட்டகுளம் அரசு உயர்நிலைப்பள்ளியில்

செங்கம், ஜூலை 9: செங்கம் அருகே கொட்டகுளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையை பூட்டி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டகுளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட மொத்தம் 4 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெரும்பாலான பாடப் பிரிவுகளுக்கு போதிய ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தை சரியாக நடத்தவில்லை என்று இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் நேற்று காலை 10க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது தலைமை ஆசிரியர் லட்சுமியிடம் காலி பணியிடத்தை நிரப்பி மாணவர்களின் தேர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்தை விட்டு உடனடியாக வெளியே செல்லுங்கள் என்று கூறினாராம். மேலும் இதுதொடர்பாக பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரியும் தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கேட்டபோது அவரிடமும் அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் தலைமை ஆசிரியர் அறையை தாழ்பாள் போட்டு பூட்டினர். இதைதொடர்ந்து தலைமை ஆசிரியரை பள்ளியில் இருந்து நீக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலைமை ஆசிரியர் பள்ளியை விட்டு சென்றார். இதனால் சிறிதுநேரம் கழித்து பள்ளியில் இருந்து பெற்றோர்களும் கலைந்து சென்றனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளியில் 3 ஆசிரியர்கள் இருந்ததால் அவர்கள் வைத்து பள்ளி வழக்கம் போல் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News