தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் தெப்பத் திருவிழா

திருவள்ளூர்: பங்குனி உத்திர திருவிழவை முன்னிட்டு ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் அமைந்துள்ளது குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில். இங்கு, கடந்த 15ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் உற்சவர் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 21ம் தேதி தேரோட்டம் நடந்தது. இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 25ம் தேதி இரவு முதல்நாள் தெப்ப உற்சவமும், ஸ்ரீ பஞ்சமூர்த்தி எழுந்தருளல் நிகழ்ச்சியும், 26ம் தேதி காலை ஸ்ரீ உமா மகேஸ்வரர் தரிசனமும், இரவு 2ம் நாள் தெப்ப உற்சவமும், ஸ்ரீசந்திரசேகரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 27ம் தேதி இரவு 3ம் நாள் தெப்ப உற்சவம் மற்றும் ஸ்ரீ சுப்பிரமணியர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று இரவு ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் ஆஸ்தானப்பிரவேசம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இன்று பங்குனி உத்திர திருவிழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் டி.வி.கருணாகரன், பி.ராஜு, எஸ்.விஜயகீர்த்தி, டி.எஸ்.பாலசுப்பிரமணி, ஜெ.ஆர்.கோபிநாத் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Advertisement

Advertisement