தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திரௌபதி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

ராஜபாளையம், ஏப்.4: ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். ராஜபாளையம் - மதுரை சாலையில் திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பூக்குழியுடன் கூடிய 12 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. கொடியேற்றத்திற்கு முன்பாக மூலவரான அம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கும், அதனருகே அமைந்துள்ள பலி பீடத்திற்கும் எண்ணெய் காப்பு சாத்தப்பட்டது.

Advertisement

பின்னர் மஞ்சள், அரிசி மாவு, வாசனை திரவியங்கள், பால், சந்தனம், தேன், கும்ப நீர் உள்ளிட்டவைகளால் கொடி மரத்திற்கும், பலி பீடத்திற்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

பின்னர் கொடி மரத்தில் நெற் கதிர்கள் வைக்கப்பட்டு மஞ்சள் காப்பு கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு நிலை மாலை சாத்தப்பட்டு, மகா தீப ஆராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வரும் 13ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Advertisement

Related News