தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோம்பை மலையடிவார பகுதியில் பட்டுப்போன பந்தல் சாகுபடிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தேவாரம், ஜூன் 3: கோம்பை பகுதிகளில் பந்தல் விவசாயத்தை ஊக்குவிக்க வேளாண்த்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், தேவாரம், போடி பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் காய்கறி விவசாயங்கள் நடந்து வந்தன. இதில் சுமார் 1000 ஆயிரம் ஏக்கர் வரை புடலங்காய் - கோவக்காய், பந்தல் அவரை, பாகற்காய், உள்ளிட்ட விவசாயம் நடந்தது. இடைக்காலங்களில் மழை இல்லாத நிலையில் பந்தல் விவசாயம் சுருங்கியது.

Advertisement

தொடர்ந்து மழையும் இல்லாததால் அனைத்து கண்மாய்கள், குளங்களிலும் மழை இல்லாத நிலையில் வறண்டன. புடலங்காய் உள்ளிட்ட பந்தல் விவசாயத்தை செய்வதற்கு தண்ணீர் மிகவும் அவசியம். இதனால் பந்தல் விவசாயத்தின் பரப்பு குறைந்தாலும், இதனை ஊக்குவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனை ஊக்குவிக்க வேளாண்மைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News