தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு வீடு வழங்கும் திட்டத்தில் ஊராட்சி செயலாளர் மிரட்டி பணம் வசூலிப்பு; ஆர்டிஓ அலுவலகத்தில் பயனாளி புகார்

ஆரணி: ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர் மனோகரனிடம் இரும்பேடு அன்னை இந்திரா நகரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் புகார் மனு அளித்தார்.

Advertisement

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 2025-2026ம் ஆண்டில் எனக்கு அரசால் வீடு கட்ட உத்தரவு வழங்கப்பட்டது. எனவே வீடு கட்டும் பணியை விரைவாக ஆரம்பித்தேன். அப்போது ஊராட்சி செயலாளர் வேலை உத்தரவு நகலை பெற்றுக்கொண்டு எனக்கு பணம் தர வேண்டும் என மிரட்டினார். பின்னர் ரூ.10 ஆயிரம் வாங்கி சென்றார். இரண்டாவது முறையாக ரூ.6 ஆயிரம் வாங்கி சென்றார். அதன்பிறகு வீடு கட்டும்போது, மீண்டும் வந்து அதிகாரிகளுக்கு தர பணம் தேவைப்படுகிறது என கேட்டார்.

நான் சுதாரித்து கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன். ஊராட்சி செயலாளர் உங்களை ஏமாற்றும் நோக்கத்தோடு பணம் பறித்துள்ளார், உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர். நான் வறுமையில் இருந்து வருகிறேன். அதனால், ஊராட்சி செயலாளர் என்னிடம் ஏமாற்றி வாங்கிய பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

Advertisement

Related News