தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முத்துப்பேட்டை அருகே ஊராட்சி மன்ற செயலர் ஆதரவாளர்களுடன் மறியல்

 

Advertisement

முத்துப்பேட்டை, ஜூன் 8: முத்துப்பேட்டை அருகே ஊராட்சி மன்ற செயலாளர் ஆதரவாளர்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் கிராமத்தில் சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலை பணிகள் தரமற்ற நிலையில் உள்ளது. இந்த சாலையை திமுக பிரமுகர் ஆதரவுடன் அதிமுக ஒப்பந்தக்காரர்கள் போடுகின்றனர் என உள்ளிட்ட பல்வேறு அவதூறான வார்த்தைகளை சுட்டிக்காட்டி ஓவரூர் இளைஞர் பாசறை என்ற பெயரில் சில தினங்களுக்கு முன்பு ஓவரூர், சங்கேந்தி, எடையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இரவோடு இரவாக துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டது.

இதனையடுத்து திமுக பிரமுகர் காவல்துறையில் புகார் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து கீழப்பெருமழை ஊராட்சி செயலராக பணியாற்றும் பிரஸ்னேவ் என்பவரை நேற்று போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி செயலர் பிரஸ்னேவ் நேற்று மாலை போலீசாரை கண்டித்து பாண்டி கோட்டகம் கிழக்கு கடற்கரை சாலையில் அவரின் ஆதரவாளர்கள் சுமார் 30பேருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் முத்துப்பேட்டை - திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனைவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து பின்னர் விடுவித்தனர். இதனால் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியது. இந்தநிலையில் ஊராட்சி செயலரான ஒரு அரசு பணியாளரே சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement