தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் மாநகராட்சி பகுதியில் பனங்கிழக்கு விற்பனை அதிகரிப்பு

கரூர், மே 7: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மருத்துவ குணம் வாய்ந்த பனங் கிழங்கு விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலை, சர்ச் கார்னர், மார்க்கெட், லைட்ஹவுஸ் கார்னர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், கோவை ரோடு போன்ற பகுதிகளில் அந்தந்த சீசன்களில் விளைவிக்கப்படும் அனைத்து வகையான பழங்களும், கிழங்கு வகைகளும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களும் மருத்துவ குணம் வாய்ந்த பழங்கள் மற்றும் கிழங்கு வகைகளை அதிகளவு வாங்கிச் சென்று பயனடைந்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஈரோடு, திருச்செந்தூர் போன்ற பகுதிகளில் விளைவிக்கப்படும் பனங்கிழங்கு வகைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட இந்த வகை கிழங்குகள் ஒரு சில மாதங்கள் மட்டுமே இந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் என்பதால் பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ஒரு கட்டு ரூ. 50 என்ற அடிப்படையில் வியாபாரிகள் பனங் கிழங்கினை விற்பனை செய்து வரும் நிலையில், இதன் தேவை கருதி அனைத்து தரப்பினர்களும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News