தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாபநாசம் அருகே மது அருந்தும் பாராக மாறிய நெல்கொள்முதல் கிடங்கு

 

Advertisement

தஞ்சாவூ, ஜூன் 14: பாபநாசம் தாலுகா தேவராயன்பேட்டை அருகே உள்ள கிடங்காநத்தம் அரசு நேரடிநெல் கொள்முதல் நிலைய கிடங்கு ஷட்டர் வசதி இருந்தும் பூட்டப்படாமல் உள்ளதால் சிலர் மதுபானம் அருந்தும் பார் ஆக பயன்படுத்தி வருகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா தேவராயன்பேட்டை அருகே கிடங்காநத்தம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது.

அந்த பகுதியில் இன்னும் அறுவடை பணிகள் தொடங்காததால் அந்த நெல் கொள்முதல் நிலையமானது தற்போது செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் அந்த நெல் கொள்முதல் நிலையம் நுழைவாயிலில் ஷட்டர் வசதி உள்ளது. ஆனால் கொள்முதல் நிலையத்தை ஷட்டர் போட்டு மூடாததால் இந்த பகுதியில் உள்ள மது பிரியர்கள் அங்கு மது அருந்துவதும், பாட்டில்களை உடைப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

எனவே அந்த வழியை கடக்கும்போது பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்த நிலையில் கிடங்காநத்தம் அரசு நேரடிநெல் கொள்முதல் நிலைய கிடங்கை ஷட்டர் போட்டு மூட வேண்டும் எனவும், மது அருந்துவர்கள் மீது துறை ரீதியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News