தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூளைச் சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

வேலூர், ஜூலை 25: வாலாஜா அருகே விபத்தில் மூளைச் சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.பெங்களூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் சதீஷ் (23). இவர் ஐடிஐ படித்துவிட்டு சிஎம்சி மருத்துவமனையில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 22ம் தேதி வாலாஜா டோல்கேட் அருகே நடந்த பைக் விபத்தில் சதீஷ் படுகாயம் அடைந்தார். இதையடுத்து ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Advertisement

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அவர் மூளை சாவு அடைந்தார். அதை டாக்டர்கள் குழுவினர் உறுதி செய்தனர். தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். பின்னர் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. அதன்படி கல்லீரல் ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கும், 2 கிட்னிகள் ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கும், கண்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும் தானமாக பெறப்பட்டது.

Advertisement