தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீதிபதி பணி ஓய்வு செம்பனார்கோயில் அருகே பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான ஆணை

செம்பனார்கோயில், ஜூன் 2: தமிழ்நாடு அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற முகாம்களை நடத்தி செயல்படுத்தி வருகிறார்.

Advertisement

அந்த வகையில் பூம்புகார் தொகுதி செம்பனார்கோயில் அருகே திமுக வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கருவாழைக்கரை, கஞ்சாநகரம் மேலையூர், செம்பனார்கோயில் ஆகிய ஊராட்சிகளுக்கு நடத்தப்பட்ட முகாமில் 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை, இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகை, கலைஞர் உரிமைத்தொகை கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்டவை தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு அதற்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமை வகித்து, 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகளுக்கான ஆணையை வழங்கினார். இதில் ஒன்றிய ஆணையர் சுமதி, வட்டார ஊராட்சிகள் வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், திமுக ஒன்றிய செயலாளர் அன்பழகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சக்கரபாணி, ஊராட்சி செயலாளர்கள் நாகராஜன், சுவாமிநாதன், வடிவேல், பொன்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement