தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாரூர் நீடாமங்கலம் அருகே ஒரத்தூர்

 

Advertisement

நீடாமங்கலம், மே 27: நீடாமங்கலம் அருகே ஒரத்தூர் மேலத்தெரு காளியம்மன் கோயில் நான்காம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா ஒரத்தூரில் உள்ள விநாயகர், காளியம்மன், பாலமுருகன் கோயில் நான்காம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இக்கோயிலில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் 25 ஆம் தேதி மதியம் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியும், மாலை முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கோரையாற்றிலிருந்து நேற்று காலை பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற பால்குடம், காவடி எடுத்து வந்தனர். மதியம் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும், இரவு அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு அக்னி கப்பரை நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதனை தொடர்ந்து இன்று மதியம் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் ,மாலை ரதக்காவடியும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை ஒரத்தூர், மேலத் தெரு கிராமவாசிகள், கிராம நிர்வாகிகள், இளைஞர் நற்பணி மன்றம், மகளிர் சுய உதவி குழுவினர் செய்து வருகின்றனர்.

Advertisement

Related News