தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அர்த்தமண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்த எதிர்ப்பு

திருச்செங்கோடு, ஜூன் 20: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் ஆதிசைவ அர்ச்சகர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில், பரம்பரை பரம்பரையாக வந்தவர்கள் தான், தற்போது பூஜைகளை செய்து வருகிறோம். சுமார் 10 தலைமுறைகளாக நாங்கள் தெய்வப்பணி செய்து வருகிறோம். இதுவரை இல்லாத வகையில், கோயில் கருவறையில் உள்ள மரகத லிங்கத்தை பாதுகாப்பதாக கூறி, அர்த்தமண்டபத்தில் ஆகம விதிகளுக்கு முரணாக, கருவறையில் உள்ள சுவாமியை படம் பிடிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களை பொருத்த, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement

தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில்களில் கூட மகாமண்டபம், அர்த்தமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு மின் விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதில்லை. ஆனால், திருச்செங்கோடு கோயிலில் மட்டும் ஆகம விதிகளை மீறி அர்த்தமண்டப பகுதிகளில் சிசிடிவி கேமரா பொறுத்த, இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது எங்களையும், பக்தர்களையும் புண்படுத்தும் செயலாகும். இதனை கண்டித்து இன்று(நேற்று) அடையாள போராட்டம் நடத்தியுள்ளோம். இனி பக்தர்களும், நகரின் முக்கிய பிரமுகர்களும் ஆகம விதிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்திற்கு தேசிய சிந்தனை பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது.

Advertisement