தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சை அண்ண நகரில் திறந்தநிலை மழைநீர் வடிகாலை சீரமைக்க வேண்டும்

 

Advertisement

தஞ்சாவூர், மார்ச் 19: தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணாநகர் பகுதியில் திற ந்த நிலையில் இருக்கும் மழைநீர் வடிகாலினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தஞ்சை நாஞ்சிக்கோ ட்டை சாலை அண்ணாநகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணி முழுமையாக நடைபெறாமல் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலையோரத்தில் திறந்த நிலையில் வடிகால் இருக்கிறது.

பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் வடிகாலில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே நீட்டியபடி இருக்கின்றன. சாலையோரத்தில் பெரிய பள்ளம் போல வடிகால் காட்சி அளித்து வருகிறது. வடிகாலுக்குள் மழைநீர் தேங்கி நாளடைவில் கழிவுநீராக மாறி உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கிக்கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

மேலும், இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் வடிகாலுக்குள் தவறி விழுந்து காயமடைகின்றனர்.இதன் காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். திறந்த நிலையில் இருக்கும் வடிகாலால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி யை நிறைவு செய்ய வேண்டும். வடிகாலை சிமிண்டு மூடி மூலம் மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

Advertisement