தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டி ரோஜா பூங்கா சாலையோரங்களில் ஆபத்தான மரங்களை அகற்ற கோரிக்கை

 

Advertisement

ஊட்டி, அக். 1: ஊட்டி ரோஜா பூங்கா செல்லும் சாலையோரங்களில் உள்ள ராட்சத மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டி நகரின் பல்வேறு பகுதிகளிலும் ராட்சத கற்பூர மரங்கள் உள்ளன. குறிப்பாக, சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பகுதிகளிலும் இது போன்ற ராட்சத மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் பருவமழை காலங்களில் விழுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சில சமயங்களில் உயிர் சேதமும் ஏற்படுகிறது. இதனால், சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகளில் உள்ள ராட்சத மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி நகரில் இருந்து ரோஜா பூங்கா செல்லும் சாலையோரங்களில் ஏராளமான ராட்சத கற்பூர மரங்கள் மற்றும் சீகை மரங்கள் வளர்ந்துள்ளன. இதில், ஒரு சில மரங்கள் அகற்றப்பட்டன.

ஆனால், அகற்றப்படாமல் ஏராளமான மரங்கள் உள்ளன. காற்றுடன் மழை பெய்தால் இவைகள் விழும் அபாயம் உள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கும் நிலையில், இந்த மரங்களால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டள்ளது.  எனவே, விபத்து ஏதும் ஏற்படும் முன் ஊட்டி ரோஜா பூங்கா செல்லும் சாலையோரத்தில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டும் என ெபாதுமக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement