தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருத்தணி முருகன் கோயிலில் கடைகள் உரிமை கோர இன்று ஆன்லைன் டெண்டர்

திருத்தணி, ஜூலை 8: திருத்தணி மலைக்கோயிலில், முருகப்பெருமானை தரிசிக்க வருகை தரும் பெரும்பாலான பக்தர்கள் முருகனுக்கு மலர்மாலை அணிவித்து தரிசனம் செய்ய விரும்புகின்றனர். கடந்த காலங்களில் மலைக்கோயிலில் மலர்மாலை, பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு திருக்கோயில் அலுவலகத்தில் நேரடி முறையில் பொது ஏலம் நடைபெற்று, வியாபாரிகள் கடைகளுக்கு உரிமம் பெறுவது வழக்கம். இந்த ஆண்டு மலைக்கோயிலில் உள்ள அன்னதானக்கூடம் விரிவுபடுத்த ஏதுவாக பூஜை பொருட்கள், மலர்மாலை கடைகளை திருக்கோயில் நிர்வாகம் காலி செய்து புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இதனால், பூஜை பொருட்கள் கடைகள் மற்றும் மலர்மாலை கடைகள் கடந்த சில நாட்களாக மூடப்பட்டதால், பக்தர்கள் பூஜை பொருட்கள் மற்றும் மலர்மாலை வாங்கிச் சென்று சாமிக்கு பூஜைகள் செய்ய முடியாத நிலையில் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இந்து அறநிலையத்துறை திருத்தணி முருகன் கோயில் சார்பில் எம்எஸ்டிசி நிறுவனம் மூலம் இன்று ஆன்லைன் பொது ஏலம் கோரப்படுகிறது. பகல் 12.30 முதல் மாலை 5 மணி வரை ஆன்லைன் டெண்டர் நடைபெற உள்ளது. இதில், வியாபாரிகள் ஆர்வத்துடன் பங்கேற்று அதிக தொகைக்கு மலர்மாலை, பூஜை பொருட்கள் கடைகளுக்கு உரிமையை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் கடும் போட்டி நிலவுகிறது.