தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அக்.20ல் 20 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்: வீரபாண்டி கோயிலில் நடக்கிறது

தேனி, செப். 27: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆண்டுதோறும் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கோயில்களில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வருமானத்திற்குள் உள்ள குடும்பங்களை சேர்ந்த ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இதன்படி, தேனி அருகே வீரபாண்டியில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கவுமாரியம்மன்கோயிலில் வருகிற அக்டோபர் 20ம் தேதி 20 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது. திருமணத்தின்போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த ஆண்டு வரை ரூ.50 ஆயிரம் வரை ஒரூ திருமண ஜோடிக்கு திருமண செலவு செய்யப்பட்டது. தற்போது தங்கத்தின் விலையேற்றத்தின் காரணமாக ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக இந்து சமய அறநிலையத்துறை உயர்த்தியுள்ளது.

Advertisement

இதன்படி, திருமணம் செய்து கொள்ள உள்ள தலா ஒவ்வொரு மணமக்களுக்கும் மணமகனுக்கான ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 4 கிராம் தங்கத்தாலி, உடைகள், மணமகளுக்கான உடைகள், பூமாலை, புஷ்பம், சீர்வரிசை பண்டபாத்திரங்கள், கட்டில், பீரோ, பாய், தலையணை ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை நடத்தி வைக்க உள்ள திருமணத்தில் பங்கேற்க விரும்பும் மணமக்கள் தங்களது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருப்பதற்கான வருவாய்சான்று, இதற்கு முன்னர் திருமணம் ஆகவில்லை என்பதற்கான வருவாய்த் துறையினரால் வழங்கப்படும் சான்று, குடும்ப அட்டைநகல், ஆதார் அட்டை நகல், மாற்றுச்சான்று நகல்களுடன் வீரபாண்டி கோயில் நிர்வாக அலுவலகத்தில் வருகிற அக்டோபர் 15ம் தேதிக்குள் சமர்பித்து விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் செயல்அலுவலர் மாரிமுத்து தெரிவித்தார்.

Advertisement