தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவெண்ணெய்நல்லூர் அருகே நெல் அறுவடை இயந்திரம் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து 2 பேர் படுகாயம்

 

Advertisement

திருவெண்ணெய்நல்லூர், ஜூன் 7: திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆம்னி பேருந்து மோதி நெல் அறுவடை இயந்திரம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் திருமணி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (31), இவருடைய உதவியாளர் ஆரணி வட்டம் அகரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தீனா (15) ஆகிய இருவரும் நெல் அறுவடை இயந்திரத்தை ஓட்டிக்கொண்டு சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அரசூர் பாரதி நகர் பகுதியில் வரும்போது பின்னால் வந்த ஆம்னி பேருந்து நெல் அறுவடை இயந்திரத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சங்கர், தீனா இருவரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து விபத்தில் கவிழ்ந்த நெல் அறுவடை இயந்திரத்தை கிரேன் மூலம் தூக்கி அப்புறப்படுத்தினர். இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement