முதியவர் தற்கொலை
Advertisement
பேரையூர், பிப். 22: பேரையூர் அருகேயுள்ள கூவலப்புரத்தை சேர்ந்தவர் சர்க்கரை(85). இவர் கடந்த 9ம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement