தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகாசி அருகே சரவெடி பதுக்கிய குடோனுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை

 

Advertisement

சிவகாசி, மே 29: சிவகாசி அருகே சரவெடிகள் பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சிவகாசி அருகே அனுப்பன்குளம் பகுதியில் உள்ள பட்டாசு குடோன்களில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தனி தாசில்தார் திருப்பதி மற்றும் அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அருணாசலம் என்பவருக்கு சொந்தமான குடோனில் சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்ட 1000 வாலா, 2000 வாலா, 5000 வாலா சரவெடிகள் பெட்டி, பெட்டியாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சரவெடிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர். இதேபோல் விருதுநகர் தாலுகா வி.முத்துலிங்கபுரத்தில் சக்திவேல் ராஜன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன்களில் சரவெடிகள் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த குடோனுக்கும் சீல் வைத்தனர.

மேலும் இவரது பட்டாசு ஆலையில் உற்பத்திக்கு தற்காலிக தடை விதித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சிறப்பு குழு தாசில்தார் ராஜ்குமார் விஸ்வநத்தம் வெற்றிலையூரணி சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்தார். அப்போது அந்த வாகனத்தில் 20 பெட்டிகளில் சரவெடிகள் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு வாகனத்துடன் பட்டாசு பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Related News