தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உரிமம் இல்லாமல் நடத்திய பழைய இரும்பு கடைக்கு சீல்: அதிகாரிகள் அதிரடி

 

Advertisement

பெரம்பூர், செப்.11: திரு.வி.க. நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பெரம்பூர் ராகவன் தெருவில் பழைய இரும்பு மற்றும் பேப்பர் கடை உள்ளது. இதன் உரிமையாளர் மைக்கேல் ராஜ். அப்பகுதியில் பள்ளிகள் மற்றும் கடைகள் அதிக அளவில் உள்ளதால் குறிப்பிட்ட அந்த கடையால் இடையூறு ஏற்படுவதாக அவ்வப்போது தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, திரு.வி.க. நகர் மண்டல அதிகாரி முருகன் தலைமையில் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த அறிவுறுத்தினர்.  அதன்படி, நேற்று காலை உதவி செயற்பொறியாளர் ரவிவர்மன், உதவி வருவாய் அலுவலர் சுரேஷ்குமார், இளநிலை பொறியாளர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று குறிப்பிட்ட அந்த இரண்டு பேப்பர் கடை மற்றும் இரும்பு கடையை சோதனை செய்தனர்.

அந்த இரண்டு கடைகளும் உரிய அங்கீகாரம் இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூற ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, அந்த 2 கடைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் உரிமம் இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறாக கடை நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement