தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் கருவேல மரங்கள் அகற்ற அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

புதுக்கோட்டை, ஜூலை 9: புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் மெர்சி ரம்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கவிநாடு கண்மாயில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, நன்மை தரும் மரங்களை நடும் பணியின் முன்னேற்றம் குறித்து, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது;

Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் மாவட்டம் தோறும் சீமைக்கருவேல மரங்களை அகற்றி நன்மை தரும் மரங்களை நடவு செய்திட அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கவிநாடு கண்மாயில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி நன்மை தரும் மரங்களை நடும் பணியின் முன்னேற்றம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், கவிநாடு கண்மாய் குளக்கரைகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள், முட்புதற்கள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டுவரும் பணியினையும், நன்மை பயக்கும் மரங்கள் நடவு செய்யப்பட்டுவரும் பணியினையும், குளக்கரைகள் தூர்வாரப்பட்டு வரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இப்பணிகள் அனைத்தையும் தொடர்புடைய அலுவலர்கள் விரைவாக முடித்து, கண்மாயிற்கு வந்தடையும் நீர் முழுவதையும் சேமித்து நிலத்தடி நீர்மட்டதை உயிர்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். எனவே கவிநாடு கண்மாயில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அனைத்தையும் முற்றிலுமாக அகற்றிட தொடர்புடைய அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், புதுக்கோட்டை ஆர்டிஓ ஐஸ்வர்யா, செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) கனிமொழி, உதவி செயற்பொறியாளர் (பொ.ப.து.) லதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News