தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆண்டிமடம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்: வாகனங்கள் முற்றுகை

ஜெயங்கொண்டம், ஜூன் 4: ஆண்டிமடம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் வாகனங்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகாவிற்கு உட்பட்ட கூவத்தூர் கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் விசாரணையில் நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆண்டிமடம் வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஆண்டிமடம் வட்டாட்சியர் ராஜமூர்த்தி தலைமையில் வருவாய் துறையினர் நீர் நிலைகளில் உள்ள கட்டிடங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

அப்போது பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். நான்கு வீடுகள் அகற்றப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. நான்கு தலைமுறைகளுக்கு மேலாக வசித்து வரும் குடும்பத்தினரை திடீரென முன் அறிவிப்பு இன்றி அகற்றியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.