தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோர்ட் உத்தரவையடுத்து கண்மாய் பகுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

 

Advertisement

திருமயம், மார்ச் 19: அரிமளம் அருகே கோர்ட் உத்தரவின்படி கண்மாய் ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அளவு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள காரமங்கலம் துறையூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட ஆண்டமையேந்தல் கண்மாயில் அப்பகுதியைச் சேர்ந்த தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதனை அகற்ற வேண்டி கீரணிப்பட்டியைச் சேர்ந்த செந்தில் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு இருக்கும் பட்சத்தில் அதனை அளவை செய்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட கண்மாய் பகுதியில் சரக வருவாய் ஆய்வாளர் மாயக்கண்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரண்யா, சர்வேயர் கலாராணி, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் கே.புதுப்பட்டி போலீசார் உதவியுடன் அளவை செய்தனர். அப்போது கண்மாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கோர்ட்டு உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் மூன்று மாத காலத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement