தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணி முருகன் கோயிலுக்கு மாற்று பாதை திட்டம்: அதிகாரிகள் ஆய்வு

 

Advertisement

திருத்தணி, மே 28: திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும், வாகனங்களில் வந்து செல்லும் பக்தர்களுக்கு ஒரே மலைப்பாதை இருப்பதால், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் அவதிப்படுகின்றனர். மலைக் கோயிலுக்கு 2வது மலைப்பாதை அமைக்க பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

இதனை நிறைவேற்றும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்து அறநிலைத்துறை சார்பில் மலைக் கோயிலில் இருந்து அமிர்தாபுரம் வரை இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 2வது மலைப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான நிலம் கையப்படுத்தி, மலைப்பாதை அமைக்கும் பணிகளுக்கான பூர்வாங்க பணிகளில் அனைத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முருகன் மலைக் கோயிலுக்கு மாற்று பாதைக்காக எடுக்கப்படும் வனத்துறைக்கு சொந்தமான நிலத்திற்கு பதிலாக திருத்தணி அருகே அலமேலு மங்காபுரம் கிராமத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான மலை புறம்போக்கு நிலம் வனத்துறை பெயருக்கு நில மாற்றம் செய்வது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் மாவட்ட வன அலுவலர் சுப்பையா ஆகியோர் நேற்று கூட்டு ஆய்வு செய்தனர். வருவாய் கோட்டாட்சியர் தீபா, திருக்கோயில் இணை ஆணையர் ரமணி வட்டாட்சியர் மதியழகன், வருவாய் ஆய்வாளர் கமல் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement