தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சங்ககிரி வழித்தடத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

சங்ககிரி, ஜூலை 3: சங்ககிரி மார்க்கமாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இடையூறின்றி தண்டவாளத்தை கடந்து செல்ல பாலங்கள் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். சென்னையில் இருந்து கோவை வரை வந்தே பாரத் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, வழிநெடுகிலும் பாதுகாப்பு நடவடிக்கையாக தண்டவாள பகுதிகளில் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேலம் மாவட்டம் சங்ககிரி ரயில்வே வழித்தடத்தில் வடுகப்பட்டி ஊராட்சி வேப்பம்பட்டி, ஆயக்காடு, மற்றும் மோரூர் மேற்கு ஊராட்சி தட்டாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இடையூறின்றி தண்டவாளத்தை கடந்து செல்ல பாலங்கள் அமைக்க வேண்டுமென பொதுமக்க்ள கோரிக்கை விடுத்திருந்தனர்.

Advertisement

இதுதொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே துறையினர் மற்றும் சங்ககிரி தாசில்தார் வாசுகி உள்ளிட்ட வருவாய்த்துறையினர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முத்துசாமி, பிடிஓ சீனிவாசன் உள்ளிட்ட ஊரக வளர்ச்சி துறையினர் இணைந்து, நேற்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, தண்டவாளத்தை கடக்காத வகையில் கம்பி வேலி அமைத்து தடை ஏற்படுத்தும்பட்சத்தில் நீண்ட நேரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே, அந்தந்த பகுதியிலேயே தண்டவாளத்தை எளிதில் கடந்து செல்லும் வகையில், தரைமட்ட பாலங்கள் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி கூறினர்.

Advertisement

Related News